tamilnadu

மின் தடை

அவிநாசி, மே 16-கருவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை (மே 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.இதன்படி மின் தடை செய்யப்படும் பகுதிகள் வருமாறு: கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன் பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.