திருப்பூர், நவ. 23 - திருப்பூர் திருக்குமரன் நகர் பகுதியில் கொசுத் தொல் லையை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்குமரன் நகர் பகுதி கிளைச் செயலாளர் கே.சேகர், நான்காவது மண்டல உதவி ஆணையருக்கு சனிக்கிழமை அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி நான்கா வது மண்டலத்துக்கு உட்பட்ட திருக்குமரன் நகர், அமரா வதி நகர், வள்ளலார் நகர் பகுதிகளில் சாக்கடை வசதி இல்லை. இதனால் வீதிகளில் சாக்கடை தேங்கி கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வா கம் சாக்கடை கழிவுநீரை உறிஞ்சி அகற்றும் வாகனத்தை அனுப்பி வைத்து சரி செய்து தரும்படி கேட்டுக் கொண் டுள்ளனர். இந்த கோரிக்கை மனு அடிப்படையில் மாநகராட்சி கழிவுநீரேற்று வாகனம் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் கழிவுநீர் உறிஞ்சி சுத்தம் செய்யப்பட்டது.