tamilnadu

img

பொங்கல் பரிசுக்கு அலைமோதிய கூட்டம்

திருப்பூரில் பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.1000 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழனன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. அவிநாசி வட்டம், பெரியாயிபாளையம் பகுதி நியாய விலை கடையில் பெருமளவு திரண்டிருந்த மக்கள். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 21 ஆயிரத்து 367 பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;