tamilnadu

அவிநாசி பகுதியில் குடிநீரின்றி மக்கள் அவதி

 அவிநாசி, ஜூலை 21- அவிநாசி அடுத்த கருவலூரில் நான்கு நாட்களாக குடி நீர் வராததால் விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்ற ஆற்று நீரே  விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்க ளாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆற்று நீர் வராததால், மக்கள் குடி தண்ணீர் கேன் ரூ.50 கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள்  கூறுகையில், கருவலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு கிராம மக்களும் பொது குழாய் மூலம் குடி தண்ணீர் பிடித்து செல்கிறோம். முன்னறிவிப்பின்றி திடீரென குடி நீர் விநியோகத்தை நிறுத்தம் செய்துள்ளதால் பெரும் அவ திக்குள்ளாகி வருகின்றோம். எனவே உடனடியாக குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.