tamilnadu

பல்லடம் வங்கி கொள்ளை வழக்கு ராஜஸ்தானில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர், மார்ச் 12 - பல்லடம் அருகே வே.கள்ளிபாளையம் பாரத ஸ்டேட் வங்கியில் நகை மற்றும் பணம் கொள்ளை அடித்த வழக்கில் ஏற்கெனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தானில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 85 பவுன் நகை மற்றும் ரூ.11 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வே.கள்ளிபாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இங்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஜன் னல் கம்பியை அறுத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பாதுகாப்பு பெட்டகத் தில் இருந்த 600 பவுன் நகை மற்றும் 19 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள் ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் குற்ற வாளிகளைப் பிடிக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் 11 தனிப்படை  அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் அணில் சிங் என்பவரை தில்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் கள்ளிப்பாளையம் வங்கியில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து அவரை அரியானா மாநிலத்தில் இருந்து தனிப்படை போலீசார் பல்லடம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதனையடுத்து போலீசார் அவரை தனி இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கொள்ளை யடித்து விட்டு அனந்தபூர் சென்று, அங்கிருந்த ராமகிருஷ்ணன் ஆச்சாரி மற்றும் ராமன்ஜி அப்பா என்பவர்களிடம் கொள்ளையடித்த நகைகளை விற்ப னைக்காக கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் நகையை விற் பதற்காக அவர்கள் இருவரும் சேலம் வந்ததை அறிந்த  தனிப்படையினர் அவர்கள் இருவரையும் சேலத்தில் வைத்து கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 85 பவுனை மீட்டனர். மேலும் இந்த வங்கி கொள்ளை யில் ராஜஸ்தானைச் சேர்ந்த இசார் கானுக்கு தொடர்பு இருப்பதாக போலீ சாரிடம் அணில்சிங் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளை யம் போலீசார் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். அங்கு இசார்கானை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் இசார்கானை ராஜஸ்தானிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்த ரவுடன் அழைத்து வர உள்ளனர். இதனிடையே, அணில் சிங்கிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில் காமநாயக்கன்பாளையம் காவல் ஆய்வா ளர் அருள் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை வியாழனன்று பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து அவரை தில்லிக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் தெரிவித்தனர்.