tamilnadu

img

ஊத்துக்குளியில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் திறப்பு

திருப்பூர், மார்ச் 1 – திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்ட (இஎஸ்ஐ) மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது. ஊத்துக்குளி காவல் நிலையம் அருகில் உள்ள மேற்கு ராஜ வீதியில் இந்த மருந்தகக் கட்டிடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்ட இயக்குனர் குருநாதன் வரவேற்றார். கூடுதல் ஆணை யர் மற்றும் மண்டல இயக்குனர் தொழிலாளர் ஈட்டுறுதி கழகம் கிருஷ்ணகுமார், திருப்பூர் தொழிலா ளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்புத் திட்டம் பிரேமா, ஊத்துக்குளி வட்டாட்சியர் கார்த்திகேயன், ஊத்துக்குளி அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் கலந்து கொண்டு மருந்தகத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் கலந்துகொண்ட கால்நடை பராம ரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அரசு அலுவலர் கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொழிலா ளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.