tamilnadu

img

அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சைக்கிள் பயணத்தில் பங்கேற்றோருக்கு மாணவர் சங்கம் பாராட்டு விழா

திருப்பூர், ஜூலை 21 - தமிழகத்தில் அரசுப் பள்ளி களைப் பாதுகாக்கவும், அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்தும் மாநில அளவில் நடத்தப்பட்ட சைக்கிள் பிரச்சார பயணத்தில் பங்கேற்றோருக்கு இந்திய மாண வர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்தில் அரசுப் பள்ளி களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்துடன் சென்னை, கடலூர், கோவை, குமரி ஆகிய நான்கு முனை களில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சைக்கிள் பிரச்சாரப் பயணம் தொடங்கப் பட்டது. மே 25ஆம் தேதி தொடங் கிய இப்பயணம் பல்வேறு மாவட்டங்களின் வழியாக 1500 கிலோமீட்டர் தூரம் பயணித்து, ஜூன் 1 ஆம் தேதி திருச்சியில் சங் கமித்தது. இதில் கோவை மண்டல பிரச் சாரக் குழுவில் திருப்பூர் மாவட் டத்தில் இருந்து 4 மாணவிகள் உள்பட 23 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்குப் பாராட்டு விழா திருப்பூர் மரக்கடை சந்தில் உள்ள பி.ஆர். நிலையத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்திய மாண வர் சங்கத்தின் திருப்பூர் மாவட் டத் தலைவர் முகிலன் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்டத் துணைத் தலைவர் பிரவீன் தொடக்கவுரை ஆற்றி னார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், தீக்கதிர் செய் தியாளர் வே.தூயவன் ஆகியோர் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க, சைக்கிள் பிரச்சார பயணக்குழு வில் பங்கேற்றோரை வாழ்த்திப் பேசினர். இதைத் தொடர்ந்து பிரச்சார பயணத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அதில் கிடைத்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். வழி நெடுகிலும் பொதுமக்கள் பயணக்குழுவின் நோக்கங்களை கேட்டறிந்து ஆதரவும், வரவேற்பும் கொடுத்த னர். உடல்ரீதியாக சிரமமாக இருந்தாலும், மனரீதியாக பெரும் உற்சாகத்துடன் இப்பயணத்தை நிறைவு செய்ததாக நெகிழ்ச்சி யுடனும், நம்பிக்கையுடனும் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து  பயணக் குழுவில் பங்கேற்ற 4 மாணவிகள் உள்பட 23 பேருக்கு வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். இதில்  மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் சம்சீர் அகமது நிறைவுரை  ஆற்றினார். விழாவின் நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுதா நன்றி தெரிவித்தார்.