திருப்பூர், நவ.18- நவ.26 தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்தை திருப் பூர் மாவட்டத்தில் முழு வெற்றி பெறச் செய்ய தொழிலாளர், விவசா யிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண் டுகோள் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழுக் கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலை மையில் புதன்கிழமை (நவ.18) திருப் பூர் தியாகி பழனிச்சாமி நிலை யத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் உள்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் மோச மான கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 26ஆம் தேதி 10 மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட் டத்தை அறிவித்துள்ளன. அரசி யல் சட்டத்தையும், நாடாளுமன் றத்தையும், ஜனநாயகத்தையும் கிஞ்சிற்றும் மதிக்காமல், பாரதிய ஜனதா அரசு, தொழிலாளர்க ளையும், விவசாயிகளையும், நாட்டு மக்களையும் கேட்பாரற்ற முறை யில் சுரண்டலுக்கு உள்ளாக்கி, கார்ப்ரேட்டுகளின் வேட்டைக் காடாக இந்தியாவை மாற்றும் முயற்சியில் தீவிரமாகச் செயல் பட்டு வருகிறது.
இதற்கெதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளி லும் தொழிலாளர்களும், விவசாயிக ளும் கொதித்தெழுந்து வருகின்ற னர். அதற்கேற்ப நவம்பர் 26ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தப் போராட் டத்தை அறிவித்துள்ளன. இதேபோல், கொரோனா பொது முடக்க பாதிப்புகளை கருத்தில் கொண்டு, வருமான வரிகட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும், மாதம் ரூ.7500 வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். ஒரு நபருக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி, கோதுமை வீதம் குடும்பங்க ளுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தை ஆண் டுக்கு 200 நாள் வேலையாக உயர்த்தி, நகரங்களுக்கும் விரிவாக் கம் செய்து, அதில் வழங்கப்படும் குறைந்தப்பட்ச கூலி ரூ.600 ஆக அதிகரிக்க வேண்டும். வங்கி, காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்ம யப்படுத்தக் கூடாது. தொழில் தக ராறு, தொழில் உறவு, தொழிலா ளர் சட்டம் என 44 சட்டங்களைச் சீர்திருத்துவதாகக் கூறி, கார்ப்ரேட் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக மாற்றும் 4 சட்டத் தொகுப்புகளைக் கைவிட வேண்டும். கிராமப்புற விவசாயிகள் வாழ் வாதாரத்தையும், விவசாயத் தையும் பேரழிவுக்கு உட்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட அடிப்படையான கோரிக்கைகளை மத்திய தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ளன. அதேபோல் விவசா யிகள் வாழ்வாதாரக் கோரிக்கை களை முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் போராட்டக் கூட்ட மைப்பு, நவம்பர் 26, 27 தேதிகளில் நாடு தழுவிய போராட்டத்தை அறி வித்துள்ளது. மத்திய அரசின் தொழி லாளர் விரோத, விவசாயிகள் விரோத, தேச விரோத கொள்கை களுக்கு எதிராக, தேசத்தின் அச்சா ணியாகத் திகழும் தொழிலா ளர்களும், விவசாயிகளும் கை கோர்த்து வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாட்டையும், நாட்டு மக்களை யும் காக்கும் இந்த மகத்தான போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு மனப்பூர்வமான ஆதரவை தெரிவித்துக் கொள்கி றது. மேலும், தொழிலாளி வர்க்கத் தின் வீரஞ்செறிந்த போராட்டப் பாரம்பரியம் கொண்ட திருப்பூர் மாவட்டத்திலும் இப்போராட் டத்தை முழு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அனைத்துப் பகுதி தொழிலாளர்களையும், விவசாயி களையும், பொது மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொழிற் சங்கங்கள்அறிவித்துள்ள மறியல் போராட்ட இயக்கத்திலும் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்க ளும், விவசாயிகளும் பங்கேற்று, மத்திய அரசின் தவறான கொள்கை களைப் பின்வாங்கச் செய்வதற்கு தங்களது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யும்படியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கி றது. இது நாட்டைக் காக்கும் போராட்டம், மக்கள் வாழ்வாதா ரத்தைக் காக்கும் போராட்டம், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டம் என்ற உணர்வோடு உழைக்கும் மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அனைத்துப் பகுதி ஜனநாயக சக்திகளும் நவம்பர் 26 ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கேட்டுக் கொள்வதாக அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.