திருப்பூர், அக். 24 - திருப்பூர் புதிய பேருந்து நிலை யத்தின் பின்புறம் உள்ள வீதிக ளில் மின் விளக்குகள் பழுதடைந் திருப்பது, பொது மக்கள், பயணிக ளிடம் சமூக விரோதிகள் வழிப் பறி மற்றும் சட்டவிரோத செயல்க ளில் ஈடுபட வாய்ப்பாக உள்ளது. எனவே தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சமூக விரோ திகளுக்கு ஊக்கமளிக்கும் இருள் சூழ்ந்த நிலையைப் போக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் பி.முரு கேசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, திருப் பூர் புதிய பேருந்து நிலையத் தின் மேற்குப் பகுதியில், அதா வது பேருந்து நிலையத்திற்குப் பின்புறம் உள்ள வீதிகளில் மின் விளக்குகள் பழுதடைந்து, நீண்ட நாட்களாக இருளடைந்த நிலை இருக்கிறது. தினமும் பல ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல் லக்கூடிய பேருந்து நிலையம் பகு தியில் உள்ள வீதிகளில் மாநக ராட்சி நிர்வாகத்தால் இதுபோல் கேட்பாரற்ற நிலை நீடிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தீபாவளி பண்டி கைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்துதான் தங் கள் சொந்த ஊர்களுக்குச் செல் வார்கள். இந்நிலையில் சமூக விரோதிகள் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு வசதியாக இது போன்று மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்திருப்பதைக்கண்டு கொள் ளாமல் இருப்பது சரியல்ல. எனவே புதிய பேருந்து நிலை யத்தின் பின்புறம் இருள் சூழ்ந்த நிலையை உடனடியாக போக்க வும், மின்விளக்குகளைப் பழுது நீக்கி பொது மக்களின் அச்சமற்ற நடமாட்டத்தை உறுதிப்படுத்த வும் வேண்டும்.
பழுப்புநிறத்தில் குடிநீர்
மேலும், திருப்பூர் மாநகரில் மாநகராட்சியால் விநியோகம் செய்யப்படும் குடிநீர் சேறு கலந்த பழுப்பு நிறத்தில் குழாய் களில் வருகிறது. இந்த நீரைத் தான் பொது மக்கள் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஏற்கனவே மழை கால மாக பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு விதமான காய்ச்சல்கள், சளி, இருமல் உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவி வருகின்றன. எனவே மாநகரில் மக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீரை முறையாக சுத்திகரித்து, நிற மில்லாத நல்ல குடிநீரை விநி யோகம் செய்ய வேண்டும். குடி நீரில் போதிய குளோரின் கலந்து சுகாதாரமான, சுத்தமான குடிநீர் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும். அதேபோல் மாநகரில் டெங்கு காய்ச்சல் தாக்குதல் பரவி வரு கிறது. எனவே மாநகராட்சி நிர்வா கம், சுகாதாரத் துறை உடனடி யாக நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சுகாதார நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வார்டுக ளிலும், எல்லா வீதிகளிலும் நில வேம்புக் குடிநீர் வழங்குவது, குப்பை அகற்றம், கழிவுநீர் அகற் றம் உள்ளிட்ட தூய்மைப் பணிக ளையும் முழுமையாக நிறை வேற்ற வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.