உடுமலை, செப். 29- கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பயிலும் வேளாண் வணிக மேலாண்மை மாணவ, மாணவி கள் உடுமலை வட்டாரத்தில் வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்திற்காக முகாமிட்டுள்ளனர். இவர்கள் சனியன்று புங்கமுத்தூர் ஊராட்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.சண்முகவடிவேல் தலைமையில் கரட்டுமடம் கிராமத்தில்தென்னையில் மகசூலை அதிகரிக்க நுண்ணுயிர் சத்து அளிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், நுண்ணு யிர் சத்த அளிப்பதன் மூலம் தென்னை மரங்களை கடுமையான வறட்சி மற்றும் பனியிலிருந்து காத்து, இளம் கன்றுகள் வளர்வதை அதிகரித்து, நோய்களை தடுத்து சிறப்பான வளர்ச்சியை தருகிறது. மேலும் கோகோ சக்தி அளிப்பதன் மூலம் மரங்களின் வேர் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும், பச்சையங்க ளின் அளவை அதிகரிப்பதோடு பிஞ்சு காய் உதிர் தலையும் தடுக்கிறது என்றனர்.