தாராபுரம், ஜுலை 1 - தாராபுரம் அமராவதி ஆற்று மணலை கபளீகரம் செய்வதை தடுக்கக்கோரி குரல் கொடுத்த வர்கள் மீது மணல் கடத்தல் கும் பல் கொலை வெறி தாக்குதல் நடத் திய நிலையில், தாக்குதலில் படு காயமடைந்தவர்கள் மீதே காவல் துறை வழக்குபதிவு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் அமராவதி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள், அர சியல் கட்சியினர், உயர்அதிகாரி களுக்கு பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மணல் கடத்தல் கும்பல் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறது. கறிப்பாக, அம ராவதி ஆற்றில் பல்வேறு பகுதி களில் பாதை அமைத்து கனரக இயந்திரங்கள் மூலம் மணலை அள்ளி லாரிகள் மூலம் இரவுநேரங் களில் கடத்தி செல்கின்றனர். மேலும் மணல் திருட்டு குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடப்பது வாடிக் கையாகியுள்ளது. தாராபுரம் நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது அமராவதி ஆற்றில் உள்ள தடுப் பணை பகுதியாகும். இங்குதான் நகராட்சி நீரேற்று நிலையம் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கிணறும் உள்ளது. இந்த பகுதி யில் குவிந்து கிடக்கும் மணலால் வறட்சி காலத்திலும் நீர்பிடிப்பு இருக்கும். இதன் காரணமாக நக ராட்சி நிர்வாகம் குடிநீர் தட்டுப் பாட்டை ஒரளவு சாமாளித்த வந்தது. தற்சமயம் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லை.
இந்நிலையில் தடுப்பணை பகுதியில் உள்ள மணலை குறி வைத்த மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து இரவு நேரங்களில் உப்புத்துறைபாளையம் பகுதி வழியாக பாதை அமைத்து திருடி வந்தது. இதுகுறித்து சமூக ஆர் வலர்கள் மருதமுத்து (35), சுரேஷ் (37) , தங்கத்துரை (28) ஆகியோர் கடந்த 10 நாட்களாக பேஸ்புக், வாட்சப் மூலமாக பதிவு செய்து வந்தனர். மேலும் கடந்த வெள்ளிக் கிழமையன்று மருதமுத்து என்ப வர் தாராபுரம் துணை ஆட்சிய ரிடம் தடுப்பணை பகுதியில் மணல் கடத்துவது குறித்தும், அப்பகுதி யில் உள்ள மணல்மேடுகள் அழிக்கப்பட்டு கட்டாந்தரையாக் கப்பட்டது குறித்தும் புகைப்படங் களுடன் மனு அளித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த மணல் கடத்தல் கும்பல் மருதமுத்து உள் ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளது. இதுகுறித்து தாக்குதலில் படு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருதமுத்து கூறுகையில், மணல் கடத்தல் குறித்து தொடர்ந்து மனு அளித்து வந்தேன். இந்நிலையில் வெள்ளி யன்று நண்பர் ஒருவரை சந்திப்ப தற்காக நாங்கள் 3 பேரும் சென்று விட்டு பின்னர் ஒரே காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது அமராவதி ஆற்றுப் பாலம் அருகே உள்ள வேகத்தடை யில் கார் ஏறி இறங்கும்போது அப்பகுதியில் மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென காரை நோக்கி வந்தனர். இதன் பின் கார் சாவி மற்றும் செல் போனைகளையும் பிடுங்கி வீசி விட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு, அரிவாளால் சர மாரியாக வெட்டினார்கள். அப்போது, எங்கள் மீதே புகார் கொடுக்கிறீர்களா, எங்களை ஒன்றும் செய்ய முடியாது என மிகவும் ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத் தனர்.
மேலும் ரீப்பர் கட்டை, கரும்பை கொண்டு காரையும் அடித்து நொறுக்கி, காரோடு சேர்த்து எங்களை அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட முயற்சி செய்தார்கள். அந்த நேரத்தில் சிலர் அவ்வழியாக வாகனத்தில் வந் ததை பார்த்ததும், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதன்பின் அவ்வழியாக வந்தவர்கள் எங் களை மீட்டு தாராபுரம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். நாங்கள் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டு ஒரு மணிநேரத்திற்கு மேலாகி யும்கூடகாவல்துறையினர்யாரும் விசாரிக்க வரவில்லை. இந்நிலை யில் அங்கு வந்த பத்திரிகையாளர் கள் மாவட்ட காவல் கண்காணிப் பாளர், துணை காவல் கண்காணிப் பாளர் என உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் தாராபுரம் காவல்நிலையத்தில் இருந்து யாரும் வரவில்லை. இதைத்தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தொடர்பு கொண்டு பேசிய பின்னரே காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து நடந்த சம்பவம் குறித்த வாக்குமூலத்தை பெற்றனர். அப்போது, எங்களை தாக்கியது அமராவதி தடுப்பணையில் மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த செல்லமுத்து, அவரது சகோதரர் ஜெகன்நாதன் மற்றும் அடையாளம் தெரியாத மற்ற 3 பேர் என தெரிவித்திருந்தோம். ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், செல்ல முத்து அளித்த புகாரின்பேரில் எங்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடி யாத பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இது அப்பட்டமான பொய் புகார் என விசாரணை அதி காரிக்கு தெரிந்திருந்தும் எங்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ஆகவே, எங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், மணல் திருட்டு கும்பலுடன் சேர்ந்து கொண்டு மணல் திருட்டை தடுப்பவர்களை மிரட்டுவதற்காக காவல்துறையினர் எங்கள் மீதே வழக்கு பதிந்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடர உள்ளோம் என தெரி வித்தார். இதற்கிடையே காய மடைந்த சுரேஷ் மற்றும் தங்கத் துரை ஆகியோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணல் திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலை யில், மணல் கடத்துவது குறித்து தகவல் அளித்த சமூக ஆர்வலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது டன், அவர்கள் மீதே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது சமூக ஆர்வலர் கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மேலும், இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டும் அது தொடர்பாக கண்டும், காணாதது போல் இருப்பது பெரும் சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இதுகுறித்து நேர்மையான விசாரணை நடத்தி சம்பந்தபட்ட மணல் கடத்தல் கும்பல் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என் பதே பொதுமக்களின் கோரிக்கை யாகும்.