tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

திருப்பூர், டிச. 16 – திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக தோழமைக் கட்சிகளுக்கு இடையிலான இடப் பங்கீட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் ஒதுக் கப்பட்டுள்ளன. இதில் ஊராட்சி ஒன்றிய வார்டு எண் 5 மற்றும் வார்டு எண் 8 ஆகியவை ஒதுக்கப் பட்டுள்ளன. பொங்குபாளையம் ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றிய 5ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.அப்புசாமி கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய 8ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் உஷா  மகேஷ் திங்களன்று திருப்பூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி ஒன்றிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செய லாளர் சி.மூர்த்தி, அப்பகுதி பிரமுகர் தங்கவேல், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.மகேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணி என்கிற முருகசாமி, கருப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அவிநாசி
அவிநாசி ஊராட்சி ஒன்றிய 19- ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பி.முத்து சாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் விசைத்தறி தொழிலாளர் சங் கத்தின் மாவட்ட நிர்வாகி குட்டி (எ) மோகன் சுந்தரம், காங்கிரஸ் நிர்வாகி செட்டி காளியப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் துணை தலைவர் காளியப்பன், பொன்னுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். வடுகபாளையம் ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினருமான ஆர்.பழனி சாமி ஊராட்சி மன்ற தலைவர் பத விக்கு திங்களன்று வேட்பு மனு தாக் கல் செய்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஒன்றியச் செயலா ளர் எஸ்.வெங்கடாசலம், மல்லப்பன், ராமசாமி, சின்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பழங்கரை ஊராட்சி மன்ற தலை வர் பதவிக்கு பி‌.கலையரசி தங்கராஜ் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வேட்பு மனு தாக்கல் செய் தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.வெங்க டாசலம், மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

9072 வேட்பு மனு தாக்கல்
திருப்பூர் மாவட்டத்தில் 9072 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள் ளனர். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக 127 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பி னராக 1022 பேர், கிராம ஊராட்சி  தலைவராக 1445 பேர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பி னராக 6478 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.