tamilnadu

img

பல்லடத்தில் மார்க்சிஸ்ட்  கட்சி ஆர்ப்பாட்டம்

 திருப்பூர், ஆக. 7 – மோடி அரசின் அடக்குமுறை மற்றும் உரிமைப் பறிப்புச் சட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வை.பழ னிச்சாமி தலைமை ஏற்றார். ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஒய். அஷ்ரப், மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்திய மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டு பாஜக அரசின் ஜன நாயகப் பறிப்பு சட்டங்களை கண்டித்து முழக்க மிட்டனர்.