திருப்பூர், டிச.22 உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் அனைத்து வேட் பாளர்களும் தங்கள் உள்ளூர் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க, குழந்தை களைச் சேர்க்க நடவடிக்கை எடுப் போம் என உறுதியளிக்குமாறு கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு கோரி யுள்ளது. இது குறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, உள்ளாட்சி அமைப்புகளால் பாது காக்கப்பட வேண்டிய, கண்காணிக் கப்படவேண்டிய முதன்மையான உள்ளூர் அளவிலான ஜனநாய கத்தின் நாற்றங்கால்களே ஊர்ப் புற அரசுப் பள்ளிகள். தமிழகத்தின் பள்ளிகள் கடந்த கால் நூற்றாண்டு களுக்கும் மேலாக மத்திய ஆட்சி யாளர்களின் ஜனநாயக விரோதக் கொள்கைகளால் அழிவுக்கு ஆளாகி வருகின்றன. தமிழகத்தின் ஆட்சி யாளர்களும் புதுதில்லியின் கொள்கைக் கூட்டாளிகளாகவே இருந்து வருகின்றனர். இந்திய ஒன்றிய ஆட்சியாளர் களின் தனியார்மய, வணிகமய கல்விக் கொள்கைகளின் பெரும் பாதக விளைவுகள் தமிழ் நாட்டின் ஊர்ப் புறங்களில் இயங்கி வந்த அரசுப் பள்ளிகளை இயற்கை மரணம் அடைய வைத்துள்ள பெருங்கேடு வேகமாக நடந்துகொண்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசின் உலகமய, தனி யார்மய கல்வி வணிகக் கொள்கை களை மாநிலங்களின் மீது திணிக்க கல்வி உரிமை பொதுப்பட்டியலில் நீடிப்பது முதன்மையான காரணமாக உள்ளது. பல்வேறு ஓட்டைகளுடன் உரு வாக்கப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கல்விப் பொறுப்புகளும் ஏட்டளவில் மட்டும் உள்ளன. பள்ளிகளை நிர்வகிப்பதில் உள்ளாட்சி அமைப்புகளின் அக் கறை படிப்படியாக இல்லாமல் போய் விட்டது. உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் கல்வி வரி குழந்தைகளின் கல்விக்கு முறையாகப் பயன்படுத்தப் படுவதுமில்லை. பல்வகைப் பாகுபாடுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும், ஆன்மீகக் கருத்தியல் மூலம் விதைத்து, அதன் விளைபொருளாகக் கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்திய சாதிய, சமய, சமூகப் பொருளாதார அமைப்பின் அவலங்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாதவை. மக்கள் பிரிவினரில் மிகச் சிறு பான்மையினராக உள்ள சமூக, அரசியல், பொருளாதார அதிகாரப் படி நிலை அமைப்பில் மேலே இருப்பவர் களின் ஆதிக்கம் சரியாமல் இன்றளவும் நீடிக்கின்றன. இந்தியாவில் முன்பு நிலவிய குருகுலக் கல்வியில் மேலி ருந்த இரண்டு வர்ணத்தினரே கல்வி வாய்ப்புகளைப் பெற முடிந்தது. அன் றைக்கும், இன்றைக்கும் அடித்தட்டு மக்கள் கல்வி மறுப்பு என்னும் கொடு மைக்கு உள்ளாக்கப்படுவது மாறாமல் உள்ளது. நவீன காலத்திலும் இந்திய நால்வர்ண சமூக அமைப்பு முறை புதிய வடிவங்களில் உருமாற்றம் பெற்று வருகின்றது. ஜனநாயகக் கொள்கைகளற்ற கல்வி அதிகார அமைப்பு முறை இந்தி யாவில் திட்டமிட்டே உருவாக்கப் படுவது மிகவும் கவலைக்குரிய ஒன் றாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘‘கேடில் விழுச்செல்வம்” என்று கல்வியைப் போற்றிய பெருமை தமிழகத்திற்கு உண்டு. வரலாற்றுத் தவறுகளால் இந்திய ஒற்றை அதி காரக் கட்டமைப்புக்குள் சிக்கியுள்ள தமிழகக் கல்வியும் இன்று பாழ்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரு வதும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெருகி வருவதும் மிகவும் கவலைக்குரிய ஒன்று. தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறைவைப் பற்றி கவலை கொள்வதாக சொல்கிறது. அதை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்ப தாகவும் கூறி வருகிறது. ஆனால் உண்மையான காரணங்களைக் கண்ட றிந்து அவற்றைத் தீர்ப்பதற்குப் பதி லாக, அவ்வப்பொழுது பல திடீர் ஆணைகளைப் பிறப்பித்து பள்ளி களின் செயல்பாடுகளில் நிலையற்றத் தன்மையை உருவாக்குகிறது. சமீப காலங்களில் திடீர் அரசாணைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியா குடியரசு நாடு என்று அறிவிக்கப்பட்ட 70 ஆண்டுகள் கடந்த பிறகும் அதிகாரமற்ற, ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு நிலை மக்கள் சம வாய்ப்பு களை, சம உரிமைகளைப் பெற முடிய வில்லை. சமமான மதிப்பும் மாண்பும் உரிமையும் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை மீட்க முதன்மையான விடுதலைக் கருவியாகப் கல்வியே பயன்பட முடியும். பலவேறு அவலங் களைக் கொண்ட ஒரு சமூக அமைப்பை ஒரு ஜனநாயக சமூக அமைப்பாகப் புத்துருவாக்கம் செய்ய கல்வியைத் தவிர வேறு வழிமுறை இல்லை. ஜனநாயக விரோதமான கொகை களால் சீரழிக்கப்படும் கல்வியை அடித்தட்டு மக்களின் விடுதலைக்கான கருவியாக மாற்றுவதே ஜனநாயக அக்கறையுள்ளவர்களின் நோக்கமாக இருக்க முடியும். உள்ளூர் மக்களும், உள்ளாட்சி அவைகளும், ஆசிரியர்களும், பெற் றோர்களும் அவரவர் ஊரில் உள்ள அரசுப்பள்ளிகள் மீது அக்கறை கொள் வதன் மூலமே கல்வி உரிமைகளையும், மாண்புகளையும் பாதுகாக்க முடியும். தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏற்ற வண்ணம் கல்வியில் மாற்றங்களைச் செய்வதற்கும், வளங்களை வழங்கு வதற்கும் ஊர் மக்களால் உருவாக் கப்படும் மூன்றாவது அரசு அமைப் பான உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடமை உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ள இன்றைய சூழலில் அரசுப்பள்ளிகள் மேம்பாடு, கல்வி உரிமைப் பாதுகாப்பு, கல்விக்கான உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புகள், அனைத்துக் குழந்தை களுக்கும் தரமான, சமமான கல்வி வாய்ப்புகள், உடல் மற்றும் மன நல ஆரோக்கியம் ஆகியன குறித்து தமிழகக் குழந்தைகளின் சார்பாக தமிழக மக்கள் அனைவரும் ஊர் தோறும் குரல் எழுப்பவேண்டி யுள்ளது. உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் அனைத்து வேட் பாளர்களும் தங்கள் உள்ளூர் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க, குழந்தை களைச் சேர்க்க நடவடிக்கை எடுப் போம் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று காலம் அறிந்து குரல் எழுப்புவோம். அதிகாரம் உள்ள வர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் நிலை உரு வானால் அரசுப்பள்ளிகள் மேம்பட வழி பிறக்கும். பணநாயகத்தாதால் சீரழிக்கப் படும் இந்திய ஒன்றியத்தின் அரை குறை ஜனநாயகத்தைப் பாதுகாக்க மக்களாகிய நாம் கீழிருந்து குரல் எழுப்புவதன் மூலம் மேலே இருக்கும் ஆட்சியாளர்களுக்கு சிறு நடுக்கத்தை யாவது உருவாக்குவோம். இவ்வாறு சு.மூர்த்தி கூறியுள்ளார்.