tamilnadu

img

கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்திடுக இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 10 - கொரோனா ஊரடங்கு முடக் கத்தினால் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு குடும்பத் துக்குத் தலா ரூ.7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்ப டைக் கோரிக்கைகளை வலியு றுத்தி இடதுசாரி கட்சிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ 7,500/- ம் மாநில அரசு ரூ 5,000/- ம் நிவாரண நிதி வழங்கவேண்டும். நூறு நாள் கிரா மப்புற வேலைவாய்ப்பு திட் டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்.  பேரூராட்சிகளுக்கும் விரிவு படுத்தவேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருள்களும் முறையாகவும், முழுமையாகவும் கிடைக்க நடவ டிக்கை எடுக்கவேண்டும். ரேசன் பொருள்கள் வழங்குவதை முறைப் படுத்தவேண்டும். முந்தைய, தற் போதைய வங்கி கடன்களுக்கான வட்டிகளை 6 மாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு தொழில்கள்  பாதிப்பு நிலையி லிருந்து மீளவும், மீண்டும் உற்பத் தியை துவங்கவும் நிபந்தனை யின்றி ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இடதுசாரி கட்சிகள் சார் பில் அறைகூவல் விடுக்கப்பட் டது.  

இந்நிலையில், செவ்வாயன்று தமிழகம் முழவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் வடக்கு, தெற்கு நகர, ஒன்றியப் பகுதிகள், வேலம்பா ளையம், ஊத்துக்குளி, பல்லடம், அவிநாசி, பொங்கலூர், உடு மலை, மடத்துக்குளம், குடிமங்க லம், தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில் உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட இடங்க ளில் செவ்வாயன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட் டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.காளியப்பன் உட்பட் இரு கட்சிகளின் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் ஆங்காங்கே நடைபெற்ற போராட்டங்களுக் குத் தலைமை ஏற்றனர்.

நாமக்கல்

நாமக்கல்லில் பல்வேறு இடங் களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிபிஎம் மாவட்ட செயலா ளர் எஸ்.கந்தசாமி, சிபிஐ மாவட் டச் செயலாளர் கொழந்தான்,  சிபிஐ(எம்எல்) நகர செயலா ளர் சுப்பிரமணி மற்றும் சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள், மாவட்டக்குழு உறுப்பினர் கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து  கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப் பினர்.  

ஈரோடு

ஈரோட்டில் சூரம்பட்டி நால் ரோடு, சூரம்பட்டி பேருந்து நிறுத் தம், வீரப்பன் சத்திரம், ஜான்சி நகா், கருங்கல்பாளையம், கமலா நகா்,பெரிசேமூா், அன்ன மார் பெட்ரோல் பங்க், திண்டல்,  கே.டி.ஆா்.நகா், ஊனாத்திபுதூா் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் இடதுசாரி கட்சிகள்  இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தி னா். இப்போராட்டத்தில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளா் ஆா்.ரகுராமன், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார  செயலாளா் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளா் பிரபாகரன் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய  செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.