திருப்பூர், மார்ச் 21 - கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ள நிலையில் பனியன் தொழிலா ளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதால், ஒரு மாத சம்பளத்துடன் தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என அனைத்துத் தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அனைத்து பனியன் சங்க நிர்வா கிகள் கூட்டம் திருப்பூர் சிஐடியு அலு வலகத்தில் சனிக்கிழமை நடை பெற்றது. இதில் சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, ஏஐடி யுசி பொதுச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் நிர்வாகிகள் க.ராம கிருஷ்ணன், ஜி.பாலசுப்பிரமணியம், பூபதி, ஏடிபி சார்பில் பி.குணசேகரன், பி.விஸ்வநாதன், ஐஎன்டியுசி தலை வர் அ.பெருமாள், செயலாளர் ஏ.சிவ சாமி, எச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில் திருப்பூரில் பனியன் தொழிலாளர் நலனைப் பாதுகாக்கக்கூடிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பூர் பனியன் தொழில் பாதித்து, இத்தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வேலை இல்லை என்று விடுமுறை அறிவிக்கும் பனியன் நிறுவனங்கள் ஒரு மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும். வேலை இல்லை என்பதற்காக தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கேற்ப அசாதாரண சூழலில் தொழிலாளர் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கூடிய முறையில் அரசு நிர்வாகம், பனியன் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்க அறிவுறுத்த வேண் டும். அத்துடன் திருப்பூரில் தொழிலா ளர்கள் பலர் வங்கி, நுண்நிதி நிறுவ னங்கள் மற்றும் தனியார் நிதி நிறு வனங்களிடம் கடன் பெற்று வாழும் நிலையில் உள்ளனர். எனவே வேலை யில்லை எனில் கடனைத் திரும்பச் செலுத்த முடியாது. எனவே நிலைமை கள் சீரடையும் வரை நிதி நிறுவனங் கள் கடன் வசூலை நிறுத்தி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் வற்புறுத்தி உள்ளன.