tamilnadu

img

திருப்பூர் அருகே அலகுமலையில் ஜல்லிக்கட்டு சீறிப் பாய்ந்த காளைகள், துணிந்து பிடித்த இளைஞர்கள்

திருப்பூர், பிப். 2 - திருப்பூர் மாவட்டம் அலகும லையில் ஞாயிறன்று ஜல்லிக்கட் டுப் போட்டி கோலாகலமாக நடை பெற்றது. இதில் சீறிப் பாய்ந்து வந்த 750 காளைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற 600 இளைஞர்கள் துணிந்து பிடித் தனர்.  திருப்பூர் அருகே அலகுமலை யில் கடந்த சில ஆண்டுகளாக ஜல் லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. 2020ஆம் ஆண்டுக் கான ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவ கங்கை, மதுரை, திண்டுக்கல் உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதே மாவட் டங்களைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கள் 600 பேர் பங்கேற்றனர். போட்டியின் தொடக்கமாக வாடிவாசலில் இருந்து அலகு மலை முருகன் கோயிலுக்குரிய முதல் காளையை அமைச்சர் ராதா கிருஷ்ணன், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்டார். தொடர்ந்து ஒவ்வொரு காளைக ளாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அவற்றின் மீது பாய்ந்து திமிலைத் தழுவி அடக்கி வெற்றி பெற்றனர்.  சில காளைகள் எதிரில் வரு வோரை முட்டித் தள்ளி எல்லைக் கோட்டை வேகமாக கடந்து சென் றன. புதுக்கோட்டையிலிருந்து அழைத்து வரப்பட்ட ’கட்டப்பா’ என்ற காளை, 8 நிமிடங்களுக்கு மேல் களத்தில் நின்று வீரர்கள் யாரும் தன்னை நெருங்காதபடி வலம் வந்தது.  தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேக ரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமு கர்களின் காளைகளும் போட்டி யில் வெற்றி பெற்றன. திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியா ளர்களின் நிறுவனங்கள் சார்பிலும் காளைகள் போட்டியில் களமிறப்பட்டு வெற்றி பெற்றன.மதுரை மாவட்டம் வெளத்தூர் ஜெகதீஸ் 12 காளைகளை அடக்கி னார். அதேபோல் மதுரை கருப்பா யூரணி கார்த்திக் 11 காளைகளை யும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கார்த்திக் 9 காளைகளையும் அடக் கினர். இவர்கள் மூவரும் சிறந்த வீரர்களாக அறிவிக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் கட்டப்பா காளை, திருச்சி மாவட்டம் சாமிரவி காளை, புதுக்கோட்டை மாவட் டம் அனுராதாவின் காளை ஆகி யவை சிறந்த காளைகளாக அறி விக்கப்பட்டன. வெற்றி பெற்றோ ருக்கும், சிறந்த காளைகளாகத் தேர்வு செய்யப்பட்ட காளைகளுக் கும் பரிசுகள் வழங்கப்பட்டன.  போட்டியைக் காண பார்வை யாளர் மாடங்கள் அமைக்கப்பட் டிருந்தன. பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரம் பொதுமக்க கள் வெயிலையும் பொருட்படுத் தாமல் போட்டியை கண்டுகளித்த னர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத் தும் பணியில் ஈடுபட்டனர்.