tamilnadu

img

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருப்பூர், அக். 4- ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக ளின் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக் காளர் பட்டியலை   திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலு வலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் வெள்ளியன்று வெளி யிட்டார்.  திருப்பூர் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளில் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிறைவு செய்யப்பட்ட ஒருங்கி ணைந்த வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டி யலை வெளியிட்டு 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளில் விதி 20 (1) மற்றும் (2) மற்றும் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளில் விதி 18(1) மற்றும் (2)ல் தெரிவிக்கப்பட்டவாறு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல்களில் இடம் பெற்றுள்ள வாக்கா ளர்களின் பெயர்கள் எதுவும் விடுபடவில்லை என் பதை 100 சதவிகிதம் மீள சரிபார்க்கப்பட்டுள்ளது. விடுதல் எதுவுமிருப்பின் உள்ளாட்சி அமைப்புக ளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தங்கள் உள் ளடக்கிய துணைப்பட்டியலை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல்களில் பாகம், வார்டு எண்கள், எதுவும் தவறுதலாக மாறி இடம் பெற்றிருப்பின் அதனை நேர்செய்து சரியான பாகம் வார்டில் இடம்பெறும் வகையில் திருத்தங்களை உள்ளடக்கிய துணைப் பட்டியல்களை வெளியிடவும் தொடர்ந்து வரும் சேர்த்தல்,நீக்கல் மற்றும் திருத்தம் குறித்து தொடர் புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரால் மேற்கொள்ளப்படும் மாற்றங்களையும் வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரை மேற்கொள்ளப்படும். எனவே திருப்பூர் மாவட்டத் தைச் சார்ந்த பொதுமக்கள்  இதனைப் பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின் போது, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுப்பிரமணியன் (வளர்ச்சி), முருகேசன், (தேர்தல்), உடுமலைப்பேட்டை வரு வாய் கோட்டாட்சியர் இந்திரவள்ளி, அரசு அலு வலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.