tamilnadu

img

தொழிலாளர்கள் உரிமையைப் பறிப்பதால் தொழில் வளராது சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேச்சு

திருப்பூர், அக். 16 - மத்திய அரசு, தாராளமயக் கொள் கைகள் மூலமாக அந்நிய மூலதனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தொழி லாளர் சட்டங்களை சீர்திருத்துவ தாகச் சொல்கிறது. ஆனால், தொழிலா ளர்களின் உரிமைகளைப் பறிப்பத னால் தொழில் வளராது என்பதே உலகில் அனுபவமாக உள்ளது என்று சிஐடியு தமிழ் மாநிலப் பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன் கூறினார். சிஐடியு சார்பில் போனஸ் கோரிக்கை குறித்த சிறப்புப் பேரவை திருப்பூர் மாவட்ட சிஐடியு அலுவல கத்தில் வியாழனன்று மாலை பனி யன் தொழிலாளர் சங்கத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரை யாற்றிய ஜி.சுகுமாறன் கூறியதாவது: போனஸ் என்பது சலுகை அல்ல, அது தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமை. மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக தொழில்கள் முடங்கியிருப்பதால் இந்த ஆண்டு போனஸ் கொடுப்பது சிர மம் என முதலாளிகள் கருத்தைப் பரப்பி வருகின்றனர். தொழிலாளர்கள் சிலரும் இந்த கருத்திற்கு இரையாகி வருகின்றனர். ஆனால் 2019ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகை யைத்தான் முதலாளிகள் தர வேண் டும். இந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல்தான் கொரோனா பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட் டது.

2019ஆம் ஆண்டு கணக்கிற்கு கடைசி ஆறு நாட்கள்தான் தொழில் முடங்கியது. எனவே கடந்த ஆண்டு உற்பத்தியாளர்கள் ஈட்டிய லாபத் தைக் கணக்கிட்டு தொழிலாளர்க ளுக்கு உரிய போனஸ் தொகையை இப்போது வழங்க வேண்டும். தொழி லாளர்கள் இதைக் கேட்டுப் பெற வேண்டும். தற்போது மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு ஆதரவாக மாற்றியுள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் கார ணம், தொழிலாளர் சட்டங்களை சீர் திருத்தினால்தான் வெளிநாட்டு மூலத னம் இங்கே வரும், தொழில் வளரும் என்கின்றனர். ஆனால் இது உண்மை யல்ல.  அமெரிக்க தொழிலாளியின் ஊதி யத்தோடு ஒப்பிட்டால் சீனாவில் தொழிலாளர்களின் ஊதியம் 11.50 சதவிதிகமாக உள்ளது. அதே நேரத் தில் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியம் 4.50 சதவிகிதமாக உள்ளது. சீனாவை விட சற்றேறக்குறைய இரண் டரை மடங்கு இந்தியத் தொழிலா ளர்களின் ஊதியம் குறைவாக இருக்கி றது. அப்படி இருந்தும் வெளிநாட்டு முதலாளிகள் தொழில் தொடங்குவ தற்கு சீனாவைத்தான் நாடிச் செல் கின்றனர்.  இங்கே தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி தரலாம் என இந்தியா வுக்கு வரவில்லை. அத்துடன் உலக அளவில் உற்பத்தியாளர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்கள் தொழில் நடத்துவதில் என்னென்ன சிர மங்கள், பிரச்சனைகள் உள்ளன என கேட்கப்பட்டுள்ளது. இதில் 14 சதவிகி தம் பேர்தான் தொழிலாளர் பிரச்சனை தொழில் நடத்த சிரமம் எனக் கூறி யுள்ளனர். ஆனால் 86 சதவிகிதம் பேர் லஞ்சம், ஊழல், அரசின் கொள்கை கள் உள்ளிட்ட இன்ன பல காரணங் கள்தான் தொழில் நடத்த சிரமத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளனர். எனவே தொழிலாளர்களின் உரிமைக ளைப் பறிப்பதால் தொழில் வளரும் என்று நினைப்பது தவறானது. தொழில் நடத்துவதற்கு தடையாக இருக்கும் மற்ற பிரச்சனைகளைக் களைய வேண்டிய ஆட்சியாளர்கள், அதைச் செய்வதற்கு மாறாக தொழிலா ளர் உரிமைகளைப் பறிக்க முயல்கின்ற னர். இதை தொழிலாளி வர்க்கம் அனுமதிக்கக் கூடாது. தொழிலாளர் கள் போனஸ் உள்பட தங்கள் உரி மைகளை விட்டுக் கொடுக்காமல் போராட முன்வர வேண்டும். இவ்வாறு ஜி.சுகுமாறன் கூறினார்.

போனஸ் கோரி ஆர்ப்பாட்டம் திருப்பூரில் அனைத்துத் தொழி லாளர்களுக்கும் நியாயமான போனஸ் வழங்கக் கோரி அக்டோபர் 21, 22 தேதிகளில் முதலிபாளையம் சிட்கோ, வெள்ளியங்காடு நால் ரோடு, லட்சுமி நகர், பெருமாநல்லூர், வேலம்பாளை யம் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் ஆகிய ஐந்து மையங் களில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர் மானிக்கப்பட்டது. முன்னதாக, அக்டோபர் 20ஆம் தேதி திருப்பூர் பனியன் தொழிலா ளர்களின் சம்பள ஒப்பந்தப் பேச்சு வார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்பாக நடைபெறும் அனைத்து தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்திலும் சிஐ டியு தொழிலாளர்கள் பெருந்திரளா கப் பங்கேற்பதென்றும் தீர்மானிக்கப் பட்டது. இந்த பேரவையில் சிஐடியு மாநி லத் துணைத் தலைவர் எம்.சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் உள் ளிட்டோர் உரையாற்றினர். பனியன் தொழிற்சங்க ஏரியா நிர்வாகிகள் உட் பட முன்னணி ஊழியர்கள் ஐம்ப துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.