tamilnadu

சேவூரில் ரூ.12 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, டிச. 2- சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங் கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.12 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம், சேவூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத் தில் 550 மூட்டை நிலக் கடலை வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.4,870 முதல் ரூ.5,130 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4,610 முதல் ரூ.4,720 வரையி லும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ. 4,300 முதல் ரூ.4,450 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது. இதில் 8 வியா பாரிகள், 67 விவசாயிகள் பங்கேற்றனர்.

;