tamilnadu

img

மாநகராட்சி மெத்தனத்தால் குடிநீர் விநியோகம் பாதிப்பு திருப்பூரில் பெண்கள் சாலைமறியல்!!

திருப்பூர் ஆக., 12 - திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 56ஆவது வார்டு செல்லம்நகர் பகுதியில் பராமரிப்புப் பணிக்காகத் தோண்டப்பட்ட குடிநீர் குழாயை செப்பனிடாமல் விட்டதால் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இதனால் ஆவேசமடைந்த பெண் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் செல்லம் நகரில் இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்ற னர். இந்நிலையில் குடிநீர் விநி யோகம் செய்யும் பிரதான குழா யில் பராமரிப்புப்  பணிகள் செய்வ தற்காக கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக மாநகராட்சிப் பணி யாளர்கள் தோண்டினர். ஆனால் முறையாக பழுது நீக்கம் செய்யாமல் அந்த குழாய்களை ஆங்காங்கே விட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப் படுகிறது. இதனால் உடைப்பட்ட குழாயில்  இருந்து குடிநீர் வீணாகிச் சென்றது.  அதேசமயம் அப்பகுதி வீடு களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக் கப்பட்டது. இப்பிரச்சனையை முழுமையாக சீரமைத்துத் தரச் சொல்லி இப்பகுதி மக்கள் அதிகாரி கள் கவனத்துக்கும் கொண்டு சென் றனர். ஆனால் அதிகாரிகள் அலட்சி யப்படுத்தியதாகத் தெரிகிறது. இத னால் கடந்த இரண்டு மாதங்க ளாகக் குடிநீர் கிடைக்காமல் சிரமப் பட்டுவந்த அப்பகுதி பெண்கள் திடீ ரென திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக நெருக் கடி மிகுந்த அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சென்ட்ரல் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலைக் கை விடும்படி வற்புறுத்தினர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்ச னையில் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுத்தால்தான் மறியலை கைவிட்டு கலைந்து செல்வோம் என பெண்கள் உறுதியுடன் தெரி வித்து விட்டனர். இதையடுத்து சம் பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் கொடுத்தனர். இதை யடுத்து மறியலைக் கை விட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.