tamilnadu

img

அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

 உடுமலை, ஆக.14- உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 45ஆவது பட்ட மளிப்பு விழா புதனன்று நடைபெற்றது.  உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் 16 பிரிவுகளும், முதுநிலை பட்டப்படிப்பில் 10 பிரிவுகளும் உள்ளன. தமிழகத்தில் முதல் நிலையாக விளங்கும் இக்கல்லூரியில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 45ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில், கல்லூரி முதல்வர் பொறுப்பு பேரா.பொன்முடி தலைமையில், கோவை டெக்ஸ் சிட்டி கலை அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளித்து சிறப்புரையாற்றினார். இளநிலை மாண வர்கள் 524 மற்றும் முதுநிலை மாணவர்கள் 186 என 710 மாணவ, மாணவியர்களுக்கு பட்டச்சான்றுகளை வழங்கினார். மேலும் 2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.