tamilnadu

img

அரசு பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை

அவிநாசி, நவ. 24- மாநில அளவிலான தடகள போட்டியில்  அவிநாசி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் பி.சூரிய பிரகாஷ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 62வது குடியரசு தின விழாவையொட்டி மாநில அளவிலான தடகளப் போட்டிகள் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நவ.18 முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 19 வயதிற்குட்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் பி.சூர்யபிரகாஷ் 15.47 புள்ளிகளுடன் முத லிடம் பிடித்து தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.  மேலும், இவர் தட்டு எறிதல் போட்டி யில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இதேபோல், ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையே யான  குண்டு எறிதல் போட்டியிலும், கர்நாட காவில் நடைபெற்ற தென்மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டியிலும், மாநில அளவிலான 33வது தடகளப் போட்டி யிலும் தங்கப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து ஆந்திராவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற் றார். விரைவில் பஞ்சாபில் நடைபெற வுள்ள தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். இவ்வாறு தொடர்ந்து குண்டு எறிதல் போட்டியில் சாதனை படைத்து வரும் மாணவன் பி.சூர்யபிரகாஷ் மற்றும் அவருக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கவிதா ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்  முருகேஷ்வரி  பாராட்டுத் தெரி வித்தனர்.