தாராபுரம், நவ. 5 - தாராபுரம் வட்டாரத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தாராபுரம் வட்டாரத்தில் உள்ள நெல் விதை உற்பத்தி நிறுவனங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஹோட் டல், இரும்பு மற்றும் ஜவுளி நிறுவ னங்கள், ரைஸ்மில், ஒர்க் ஷாப், பனியன் மற்றும் பஞ்சாலை நிறுவ னங்கள், பேக்கரி, கற்றாலை, கட்டுமா னம் உள்ளிட்ட அனைத்து வகை தொழி லாளர்களுக்கும் போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தாரா புரத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் கிளை தலைவர் கோவிந் தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட துணை தலைவர் என்.கனகராஜ், விவசாயி கள் சங்க தாலுகா தலைவர் ஆர்.வெங் கட்ராமன், பொது தொழிலாளர் சங்க கிளை செயலாளர் பி.பொன்னுச்சாமி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்க கிளை செயலாளர் சத்தீஸ்வரன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் சுப்பிர மணி, மேகவர்ணன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.