tamilnadu

img

குருதாஸ் தாஸ் குப்தா மறைவுக்கு திருப்பூரில் அனைத்து கட்சிகள் அஞ்சலி

திருப்பூர், நவ. 1 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ ரும், ஏஐடியுசி தொழிற்சங்க முன்னாள் பொதுச் செயலாளரும், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி யுமான குருதாஸ் தாஸ் குப்தா மறைவுக்கு திருப்பூ ரில் அனைத்துக் கட்சிகள் சார்பாக அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பாக வெள்ளியன்று மாலை நடைபெற்ற இக்கூட்டத் திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி தலைமை ஏற்று குருதாஸ் தாஸ் குப்தாவின் பணிகளையும், வாழ்க்கைச் சுருக்கத்தை யும் எடுத்துக் கூறினார். இதையடுத்து, முஸ்லிம் லீக் சார்பில் ஜெய்னுலாப்தீன், கொமதேக சார் பில் வேலுமணி, மதிமுக சார்பில் மு.சம்பத், காங்கி ரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், திமுக சார்பில் மாநகர அவைத் தலைவர் ஈஸ்வர மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கொமதேக மாவட்டத் தலைவர் ரோபோ ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சி.பழனிசாமி, எஸ்.ரவிச் சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். முன்னதாக அனைவரும் குருதாஸ் தாஸ் குப்தா உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி னர்.