திருப்பூர், அக். 16- தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்கப்படும் வேளாண் பயிர்க்கடன் உள்ளிட்ட கடன்களை வழங்க பழைய நடைமுறையையே பின்பற்ற ஆவ ணம் செய்யுமாறும், பால் உற்பத்தியாளர்க ளுக்கு வாராந்திர அடிப்படையில் நேரிடை யாக பணம் பட்டுவாடா செய்யவும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மாதாந்திர குறை தீர் கூட்டத்தில் கோரியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மாதாந்திர விவ சாயிகள் குறைதீர்க் கூட்டம் காணொலி வழி யாக வியாழனன்று நடத்தப்பட்டது. அப் போது, விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் காணொலி வாயிலாக நடைபெற்ற குறை தீர்க்கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது: விவசாயம் சார்ந்த பயிர்க் கடன், விவசாய நகைக்கடன், மத்திய காலக் கடன் மற்றும் இதர கடன்கள் அனைத்தும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங் கங்களில் கடந்த காலங்களில் அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டு சிரம மின்றி அங்கேயே கடன் தொகை பெற்று வந்தார்கள். தற்போது நகரத்தில் உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலமாகவே இந்த கடன் வழங்கப்படுகிறது.
வங்கிக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் திற்கும் பெரும்பாலும் 5 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். தற்போது விவ சாயக் கடன் பெறும் ஒருவர் தொடக்க வேளாண்மை சங்கத்துக்கும், மத்திய கூட்டு றவு வங்கிக்கும் என ஐந்து நாட்கள் செல வழித்துச் செல்ல வேண்டியுள்ளது. ஒருவர் கடன் பெற குறைந்தபட்சம் 15 நாட்களா வது ஆகிவிடுகிறது. இதனால் கடன் பெற விரும்பும் விவசாயிகள் பெரும் சிரமத்தை யும், அலைக்கழிப்பையும், நேர விரயத்தை யும் சந்திக்க வேண்டியுள்ளது. அத்துடன் விவசாயிகளின் அன்றாட வேளாண் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, தற்போது மாற்றம் செய்யப்பட் டுள்ள புதிய நடைமுறையைக் கைவிட்டு முன்பிருந்தது போல் தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் பெறும் பழைய நடைமுறையைத் தொடர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வலியுறுத்தினார்.
பால்பணம் நேரடியாக வழங்க கோரிக்கை
இதேபோல், ஊத்துக்குளி மற்றும் அவி நாசியில் இச்சங்கத்தின் நிர்வாகிகள் முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு: தற்போது பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கு கள் பெறப்பட்டு, ஆவின் மூலமாக நேரடி யாக பால் பணம் செலுத்தப்படுகிறது. ஆனால் வங்கியில் செலுத்துவது 15 நாட்கள் வரை காலதாமதம் ஆகிறது. மேலும் வழங் கிய பாலுக்கு உரிய தொகை வரவு வைக்கப் பட்டுள்ளதா என விவசாயிகள் தெளிவாகக் கணக்கிட்டு அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. அத்துடன் பால் பணத்தை வங்கி ஏடிஎம்களில் பெறவும் விவசாயிகள் அலைய வேண்டியுள்ளது. பல கிராமங்க ளில் ஏடிஎம், வங்கி வசதி இல்லாததால் விவ சாயிகள் கைச் செலவுக்கும், கால்நடைக ளுக்கு இடுபொருட்கள் வாங்கவும் முடியா மல் அவதிப்படும் நிலையும் ஏற்படுகிறது.
அத்துடன் பல சங்கங்களில் தானியங்கி பரிசோதனைக் கருவி வைக்கப்படவில்லை. அந்த கருவி உள்ள இடங்களிலும் விவசா யிகளுக்கு உரிய விவரச் சீட்டு வழங்குவ தில்லை. இதனால் பல்வேறு மோசடி நடை பெற்று விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற னர். எனவே பால் வழங்கும் விவசாயிக ளுக்கு உடனுக்குடன் அந்தந்த சங்கங்களி லேயே பால் பணம் பட்டுவாடா செய்யவும், அனைத்து சங்கங்களிலும் தானியங்கி பரி சோதனைக் கருவிகளை செயல்படுத்தி உட னுக்குடன் பரிசோதனை சீட்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம், ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.