tamilnadu

img

குப்பை கொட்டப்பட்ட பாறைக்குழியில் தீ விபத்து மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி

திருப்பூர், ஜூலை 21 - திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, அம்மாபாளையத்தில் இருந்து ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் குப்பை கொட்டப்பட்ட பாறைக்குழியில் ஏற்பட்ட தீவிபத் தால் அந்த வட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித் தது. அம்மாபாளையத்தில் இருந்து ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் மிகப்பெரிய பாறைக் குழி உள்ளது. இங்கு திருமுருகன் பூண்டி பேரூராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட் டப்பட்டு வந்தன. இங்கு மலை போல் குப்பை தேங்கி இருக்கும் நிலையில் ஞாயிறன்று காலை திடீரென தீ பற்றியது. மளமளவென தீ அனைத்து பகுதிகளுக்கும் பரவி சிறிது நேரத்தில் அந்த வட்டாரம் முழுவதும் மிகப்பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட னர். பல மாடி கட்டிடங்களின் உய ரத்தை மறைக்கும் அளவுக்குப் புகை மண்டலம் பரவி தீ எரிந்த நிலையில், அடுத்தடுத்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வர வழைக்கப்பட்டன. மொத்தம் ஆறு  தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணி மேற்கொள் ளப்பட்டது. ஏறத்தாழ 5 மணி நேரம் போராடி பிற்பகல் 2 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. குப்பை மூலம் பரவிய தீப்புகையினால் இப்பகுதியில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த சம்ப வம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.