திருப்பூர், மார்ச் 12 – திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள மாவட்ட நீதி மன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா நடைபெறுகிறது. திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதி பதி எஸ்.அல்லி இந்த நீதிமன்றத்தைத் திறந்து வைக் கிறார். திருப்பூர் முதன்மை மாவட்ட நீதி மன்றம், திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், தலைமை நீதித்துறை நடுவர் மன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் ஏற்கெனவே பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் குடும்ப நலம் தொடர்பான வழக்குகள் புதிதா கத் திறக்கப்படவுள்ள குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். மேலும், இனிவரும் காலங்களில் குடும்ப நலம் சம்பந்தமான வழக்குகள் புதிய குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும், குடும்ப நலம் தொடர்பான வழக்குகளை இப்புதிய நீதிமன்றத்தில் பதிவு செய்யலாம் என்றும் நீதித் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.