உடுமலை, டிச. 22- உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கான தேர்தல் விதிமுறைகள் விளக்கக் கூட்டம் உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த விளக்கக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் கள் அம்பிகா, சுப்பிரமணியம் தலைமையில் நடை பெற்றது. இதில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பி னர் ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும், ஊராட்சி தலைவர் ரூ.34 ஆயிரமும், ஒன்றிய கவுன்சிலர் ரூ.85 ஆயிமும், ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ.9 ஆயிரமும்மட்டுமே செலவு செய்யலாம். தேர்தல் செலவு கணக்குகளை 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தேர்தல் வாகனங்கள், ஒலிபெருக்கிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். வாக்குச்சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை நியமிப்பது குறித்தும் வேட்பாளர்களுக்கு கையேடுகள் வழங்கி விளக்கப் பட்டது.இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜீவானந்தம், செல்வக்குமார், நாச்சிமுத்து மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.