திருப்பூர், மே 30 – திருப்பூர் வேலம்பாளையம் நகரப் பகுதி யில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தி ஜூன் 8ஆம் தேதி மனிதசங்கிலிப் போராட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், வேலம்பாளையம் நகரக்குழுக் கூட்டம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சி.சுப்பி ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.ராஜகோபால், கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் உள்பட நகரக்குழு உறுப்பினர்கள் பங்கேற் றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு : திருப்பூர் மாநக ராட்சி, முதலாவது மண்டலத்தில் 1, 5, 6 மற்றும் 12 ஆவது வார்டுக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், அ. புதூர், பெரியார் காலனி, வேலம்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து வரும் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி மண்டல அலுவலகத்தில் பலமுறை மக்களைத் திரட்டி முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அப்போதைக்கு ஓரிரு மாதத்திற்கு குடிநீர்ப் பிரச்சனை பெரியளவில் இல்லா மல் இருக்கும். கொரோனா பொதுமுடக்கம் அறிவிப்புக்கு முன்பு முறையீட்டின் போது, 3 நாட்களுக்கு ஒருமுறை, ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்கிட மாநகராட்சி அதிகா ரிகள் உறுதி அளித்தனர். ஆனால், கொரோ னாவும், கோடை காலமும் இணைந்து மக் களைத் தாக்கும் இவ்வேளையில், மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கு வது, 4 நாட்களுக்கு ஒரு முறை, அடுத்து 7 நாட்களுக்கு ஒரு முறை, அடுத்து 10 நாட்க ளுக்கு ஒரு முறை என்றாகி, தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் தமது உறுதிமொ ழியைக் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். ஆகவே, மாநகராட்சி உறுதியளித் தவாறு 3 நாட்களுக்கு ஒரு முறை, ஒன்றரை மணிநேரம் குடிநீர் வழங்கிட வலியுறுத்தி, ஜூன் 8ஆம் தேதி திங்களன்று மாலை 5 மணிக்கு, பெரியார் காலனி பேருந்து நிறுத்தம் முதல் அனுப்பர்பாளையம் வரை தனி மனித இடைவெளியுடன் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.