tamilnadu

தேர்தல் பணி: அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், அக். 5- திருப்பூரில் சட்டமன்ற தேர்தல் பணிகளை மேம்படுத்திட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டு மாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஞாயிறன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.விஜய கார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சட்டமன்ற தேர்தலுக்கான தயா ரிப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. அனைத்து கட்சி கூட்டம்  நடத்து வது, வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், இடமாற்றம் உள்ளிட்ட தேவைக ளுக்கான தேதி பட்டியலையும் அறி வித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கூடுதலாக வாக்குச் சாவடி மையம் அமைக்கப்படும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு உரிய நடவடிக்கை மேற் கொண்டு அக். 10 ஆம் தேதிக்குள் ஆலோசனை பட்டியல் அனுப்ப வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகரிகளுக்கு உத்தரவு அனுப் பட்டுள்ளதாக அறிகிறோம். ஆனால், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் இச்சூழலில் திருப் பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் இதற்கான அனைத்து கட்சி கூட் டத்தை கூட்டி வாக்காளர் சேர்ப்பு குறித்தோ, புதிய வாக்குசாவடிகள் அமைப்பது குறித்தோ அரசியல் கட்சிகளுடன் எவ்வித ஆலோசனை கூட்டமும் நடத்தவில்லை. கடைசி நேரத்தில் அவசர சூழலில் ஆலோ சனை கேட்பது பயனற்றதாகவே அமையும்.  இதுகுறித்து  மாவட்ட தேர்தல் பணிக்கான வட்டாட்சி யரை தொடர்பு கொண்டபோது வாக்குசாவடி கூடுதலாக்குவது பற் றிய விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும் என பதிலளிக்கி றார். அரசியல் கட்சிகளின் ஆலோ சனை பெறாமல் வாக்குசாவடி பட்டி யல் வெளியிடுவது பயனுள்ளதாக அமையாது.

மேலும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக மலைவாழ் மக்க ளுக்கு வாக்குரிமை வழங்குவதும், தேர்தலுக்கு முந்தைய சில நாட்க ளுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதும் என மாவட்ட தேர்தல் அதிகாரிக ளின் அணுகுமுறை இருந்து வருகி றது. சுதந்திரம் பெற்று 75 ஆம் ஆண்டை நெருங்கி வரும் நிலையில் திருமூர்த்தி மலை பகுதிகளில் வசிக் கும் வாக்காளர்களுக்கு வாக்குரிமை வழங்கும் வகையில் அங்கு நிரந்தர வாக்குசாவடி மையங்கள் அமைப்ப தும், அனைத்து தேர்தல்களிலும் வாக்குரிமை வழங்கவும் நடவடிக் கையை இப்போதே துவங்கிட வேண்டும். எனவே, தேர்தல் பணிகள் சுமூக மாக பயனுள்ளதாக அமைய வேண் டுமெனில் உடனடியாக அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட் டத்தை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுவின் சார் பில் கேட்டுக் கொள்வதாக மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் கூறியுள்ளார்.