திருப்பூர், ஆக். 8- மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக நிரந்தரத் தொழிலாளிகளே இல்லாத அபாய சூழல் எழுந்துள்ளதாக கேஎஸ்கே நினைவுதின பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் சாடினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட மூத்த தலை வரும், அனைவராலும் கே எஸ் கே என்று அழைக்கப்படும் தோழர் கருப்புசாமியின் நினைவு நாள் மற்றும் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு கூட்டம் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம் பாளையம் நகர குழுவின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நகரச் செய லாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் பேசுகையில், திருப் பூரில் உள்ள பஞ்சாலைகள் மூடப் பட்டுள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக நிரந்தரத் தொழிலாளிகள் இல் லாத சூழ்நிலை உருவாக்கப்பட் டிருக்கிறது. கடந்த 30 ஆண்டு களில் மத்திய, மாநில அரசுகள் தனியார்மயக் கொள்கையை ஆத ரித்து கொண்டே வருகிறார்கள். மக்களின் வருமானத்தில் பெரும் பகுதி கல்வி, மருத்துவத்திற்கு செலவிடப்படுகிறது. தனியார் மயத்தால் இட ஒதுக்கீடு, பென்சன் ஆகியவை பறிபோகும். மின்சா ரத்தை அரசாங்கம் உற்பத்தி செய்து கொண்டிருந்தது. தற்பொ ழுது அம்பானி, அதானி போன் றோர் உற்பத்தி செய்து அரசாங் கத்திற்கு விலைக்கு கொடுக்கி றார்கள். இவர்களுக்காகத்தான் விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி உயரழுத்த மின் பாதை அமைக் கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறிக்கின்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். காஷ்மீருக்கு மட்டும் சிறப்பு அந் தஸ்து இல்லை.வடகிழக்கு மாநி லங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து உள்ளது. ஆனால் முஸ்லிம் சிறு பான்மை மக்கள் வாழுகின்றார் கள் என்ற காரணத்தால் சட்டங் களை மாற்றி அமைக்கின்ற னர். அசாம் மாநிலத்தில் குடியு ரிமை பதிவேடு கணக்கெடுப் பில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்தியர் அல்ல என்கின்றனர். இதைத்தொடர்ந்து பாஜக ஆளுகின்ற மாநில முதல மைச்சர்கள், எங்கள் மாநிலத்தி லும் 1951ஆம் ஆண்டு கணக்கின் படி குடியுரிமை பதிவேடு கணக் கெடுப்பு நடத்துங்கள் என்று கேட் கின்றனர். இவர்களின் நோக்கமே முஸ்லிம் சிறுபான்மை மக்களை விரட்டுவது என்பதே. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மக்களுக்காகப் போராடி வருகிறது. எனவே தோழர் கேஎஸ்கே-யின் நினைவு நாளில் அவர் விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர்வோம் என்றார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் பேசுகையில், 1975 அவரச நிலை காலத்தை காட்டியிலும் மோச மான ஆட்சி தற்போது நடை பெற்று வருகிறது. காஷ்மீர் மாநி லம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதில் ஒன்று யூனியன் பிரதேச மாக மாற்றப்பட்டு அங்கு தேர்தல் நடத்த வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சித் தலைவர் களை வீட்டுச் சிறையில் வைத்து உள்ளனர். நாடாளுமன்ற ஒரே கூட்டத்தொடரில் 32 சட்டங்க ளில் திருத்தம் செய்துள்ளனர். புதிய கல்விக்கொள்கையை அமல் படுத்தினால் வசதி படைத்தவர் கள் மட்டுமே கல்வி கற்க முடி யும் என்ற சூழ்நிலை உருவாகும். ரயில்வேயை தனியார் மயமாக்கி வருகின்றனர். இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங் கள் அனைத்தையும் தனியார் மயமாக்கும் வேலை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் சராசரியாக 4 சத விதமான மக்கள் மருத்துவத்தின் மூலம் கடனாளியாகிறார்கள் என்று ஆய்வு கூறுகின்றது. மத்திய அரசாங்கம் ஆறு ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண் டிருக்கின்றது. அருகிலுள்ள மாவட்டமான கோவையில் குடி நீர் பிரான்சு நாட்டின் சூயஸ் கம்பெனிக்கு தாரை வார்க்கப் பட்டு உள்ளது. திருப்பூருக்கு இதே நிலை வராது என்று நினைக்க வேண்டாம். கோவை மாநகராட்சி ஆணையராக இருந்தவர் தான் தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியர். இவர்தான் சூயஸ் கம்பெனிக்கு அனுமதியளித்து கையொப்பமிட்டவர். ஆகவே கே எஸ் கே அன்று எப்படி போராடி னாரோ அதை விட இரண்டு மடங்கு நாம் போராட வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக, கே எஸ் கே நினை வுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்து கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் உரையாற் றினர். மேலும், தீக்கதிர் நாளித ழுக்கான 103 சந்தாவிற்கான தொகை கட்சி தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கூட் டத்தில் திரளானோர் பங்கேற்ற னர்.