tamilnadu

img

தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

அவிநாசி. மே. 6 - அவிநாசி பேரூராட்சி பகுதிகள் முழுவதும் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவங்கியது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அவிநாசி பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் சில தினங்களுக்கு முன்பாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களான சேவூர் சாலையிலுள்ள பண்ணாரியம்மன் கோவில் வீதி, அரசு மருத்துவமனை, காவல் நிலையம், நீதிமன்ற அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு வாகனத்தின் மூலமாக புதனன்று கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, சுகாதாரத்துறை அதிகாரி கருப்பசாமி மற்றும் மாவட்ட தீயணைப்பு காவலர் ரமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.