tamilnadu

டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவன் மரணம்

அவிநாசி, மார்ச் 15- தெக்கலூரில் டிப்பர் லாரி மோதியதில் பள்ளி மாணவர் சனியன்று உயிரிழந்தார். தெக்கலூர் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் தீனா (12). இவரது நண்பர் ஸ்ரீதர் (12). இவர்கள் இருவரும் தெக்கலூர் அரசு பள்ளி யில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்தனர். இந்நிலை யில், இவர்கள் இருவரும் ஆசிரியர் காலனியில் இருந்து மிதிவண்டியில் தெக்கலூர் சென்று கொண் டிருந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி எதிர் பாராத விதமாக மோதியது. இதில் தீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த ஸ்ரீதர் அவிநாசி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிப்பர் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.