tamilnadu

டெங்கு ஒழிப்பு தினம்

திருப்பூர், அக். 17- திருப்பூர் மாவட்டத்தில் வாரந்தோறும் வியாழக்கி ழமையன்று தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, டெங்கு ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சி  மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத் துக்கொள்ளவும், குடிநீரில் கொசுப்புழுக்கள் உருவா காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், டெங்கு கொசு உற்பத்திக்கு  உறுதுணையாக  இருக்கும் கட்டிடங்களுக்கு  உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் விதிக்கப்படும். மழைநீர் தேங்கும் இடங்களான பாறைக்குழிகள் போன்ற இடங்களில் மணல் போட்டு சமன் செய்யவும் அல்லது அவ்வாறு செய்ய இயலாத இடங்களில் ஆயில்பால் ஊற்றி கொசுப்புழு உருவாகாதவாறு தடுக்க வேண் டும்.  அனைத்து உள்ளாட்சி பகுதிகளுக்கும் சுகாதார மான குளோரினேசன் செய்த  குடிநீர்  வழங்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. ஊராட்சிகளில்  பிளிச்சிங் பவுடர், குளோரின் பவுடர், டெமோபாஸ், பினாயில், பைரத்தி ரம் ஆகியவை போதிய அளவு இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து குக்கிராமங்க ளிலும் புகை மூட்ட மருந்து அடிக்க வேண்டும் எனவும், ஒட்டு மொத்த தூய்மை பணி மேற்கொள்ள  வேண்டும். டெங்கு கொசுப்புழு பணியாளர்கள் பணியிடங்க ளுக்கு வரும்பொழுது பொது மக்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  கொசு புழுக்கள் கண்டறியப்படும் வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு  கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். மேலும் குடிநீர் இணைப்பு மற்றும் மின்இணைப்பு துண்டிக்கப்படும். அதையும்மீறி கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காத நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் எனக்கூறியுள்ளார்.