tamilnadu

img

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் பேரணி

திருப்பூர், நவ. 12 - தமிழகத்தில் 36 ஆண்டுக ளாக பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப் பட்ட, காலமுறை ஊதியம் வழங்கு வதுடன், ஓய்வு பெற்றோருக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  சத்துணவு ஊழியர்களின் பேரணி திருப்பூரில் நடைபெற்றது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பணிக்கொடை, ரூ.9  ஆயிரம் ஓய்வூதியம், விலை உயர் வுக்கு ஏற்ற உணவு மானியம், அரசே எரிவாயு உருளை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று திருப் பூர் தென்னம்பாளையம் மாநக ராட்சிப் பள்ளி அருகில் இருந்து சத்துணவு ஊழியர்களின் பேரணி தொடங்கியது. இந்த பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியரகம் முன்பாக இந்த பேரணி நிறைவு பெற்றது.  இங்கு நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார். இதில் கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ராமசாமி உரை யாற்றினார். சாலைப் பணியாளர் சங்கக் கோட்டச் செயலாளர் இரா மன், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ரீட்டா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.இந்த பேரணி, விளக்கக் கூட்டத்தில் நானூறுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஐநூறு பேர் பங்கேற்றனர்.