உடுமலை, மார்ச் 4- உடுமலை வேளாண்மைத்துறை மற்றும் சிண்டி கேட் வங்கி இணைந்து விவசாயிகள் கடன் அட்டை வழங்கும் நிகழ்வு பாப்பனூத்து கிராமத்தில் நடை பெற்றது. நாடு முழுவதும் பாரத பிரதமரின் இந்த நிகழ்வு விவசாயிகளுக்கு தொலைகாட்சி மூலம் விளக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் சிண்டிகேட் வங்கி மண்டல மேலாளர், கள அலுவலர், வேளாண்மை துறை அலு வலர்கள் வைரமுத்து, மார்கண்டன், கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 50 விவ சாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.