tamilnadu

கொரோனா விதிமீறல்- வியாபாரிகளுக்கு அபராதம்

அவிநாசி, ஆக.11- சேவூர் ஊராட்சி பகுதிக ளில் தனிமனித இடைவெ ளியைக் கடைப்பிடிக்காத 20க்கும் மேற்பட்ட வியாரிக ளுக்கு திங்களன்று அபரா தம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் பல் வேறு தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. இந்நிலையில், சேவூர் ஊராட்சிப் பகுதிகளில் திங் களன்று சுகாதார ஆய்வா ளர் ரமேஷ், ஊராட்சி நிர் வாகத்தினர் உள்ளிட்டோர் கடை வீதிகளில் திடீர் ஆய் வில் ஈடுபட்டனர்.

இதில் தனிமனித இடைவெளியின் றியும், முகக் கவசம் அணியா மலும் செயல்பட்டு வந்த கடை உரிமையாளர்க ளுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதமும் விதிக்கப் பட்டது. மேலும், இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த னர்.