tamilnadu

உழவர் உற்பத்திக் குழுக்களுக்கு கொரோனா சிறப்பு நிதி வழங்கல்

அவிநாசி, செப்.10-  உழவர் உற்பத்திக் குழுக் களுக்கு கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு ரூ.15  லட்சம் வழங்கும் விழா அவி நாசிலிங்கம் பாளையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக புத்தாக் கத் திட்டத்தின் சார்பில் கொரோனா கால சிறப்பு நிதி உதவி தொகுப்பாக ரூ.15 லட்சம் அவிநாசி, திருப்பூர் வட்டாரத்தில் சிறப் பாக செயல்படும் தேர்ந் தெடுக்கப்பட்ட உழவர் உற் பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டது.

அதில், அவிநாசி வட்டாரத்தில் உள்ள 6 குழுக்களுக்கும், திருப்பூர் வட்டாரத்தில் உள்ள 4 குழுக்கள் என 10 குழுக்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிதி வழங்கும் விழா  அவிநாசிலிங்கம் பாளையத் தில் உள்ள அவிநாசி வட் டார மேலாண்மை அலுவல கத்தில் புதனன்று நடை பெற்றது.   இந்நிகழ்விற்கு, அவி நாசி ஒன்றிய குழு தலைவர் அ.ஜெகதீசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன் முன் னிலை வகித்தார். வேளாண் மைத் துறையினர், உழவர் உற்பத்தி குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.