அவிநாசி, ஜூன் 15- அவிநாசி அருகே சேவூர் சுகாதார நிலையத்தில் கொரோனா சிறப்புப் படுக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், பல மாவட்டங்களில் தாலுகா வாரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்புப் படுக்கை வசதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதி யாக திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட் சிகள் உள்ளன. இதில், சேவூர் சுற்றுவட்டாரத்தில் 13க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் செயல்படுகின்றது. அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் சேவூர் சுகாதார நிலை யத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சேவூர் சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் உள்ளது. இதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆறு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், சிகிச்சைக்காக படுக்கையில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.