tamilnadu

img

கொரோனா: தினக்கூலி தொழிலாளர்கள் பாதிப்பு

அவிநாசி, மார்ச் 23- அவிநாசி மற்றும் திருப்பூர் பகுதியில் கொரோனா அச்சுறுத் தல்  காரணமாக பனியன் நிறுவ னங்கள் உள்ளிட்ட தொழிற்சா லைகள் மூடப்படுவதால்  தினக் கூலி தொழிலாளர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலானோர் கட்டிட வேலை, பனியன் தொழில், விசைத்தறி மற்றும் சாலையோர வியாபாரம் உள் ளிட்டவைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நிலை யில் கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 79 மாவட் டங்களில் கண்டறியப்பட்டுள் ளது. இந்நிலையில், தமிழ்நாட் டில் அனைத்து மாவட்ட எல்லை களை மூடுவது மற்றும் 144 தடை உத்தரவு மார்ச் 31 வரை பிறப்பிக் கப்பட்டுள்ளது.  தற்போது  திருப்பூர் மாவட்டத் தைப் பொறுத்தவரையில் நாளுக் குநாள் அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. பனியன் நிறுவனங்கள், விசைத்தறி கூடங் களை மூடி விட்டனர்.  இதன் கார ணமாக தொழிலாளர்கள் வாழ்வா தாரத்தை இழந்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு தள் ளப்பட்டுள்ளனர். கையில் காசு இல்லாமல் அத்தியாவசிய தேவை களை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து செல்போன் கடை உரிமையாளர் மோகன் கூறு கையில், தினசரி செல்போன் ரீசார்ஜ் மட்டும் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் செய்வேன். அத்துடன் செல் போன் சர்வீஸ் செய்வது போன் றவை போன்ற வேலை நடை பெற்று வரும். ஆனால் தற்போது பொதுமக்கள் ரீசார்ஜ் செய்வதற்கு கடைக்கு வருவதில்லை, இதன் மூலம் பொதுமக்களிடம் பெரிதும் பணம் இருப்பதில்லை என எங்க ளுக்கு தெரிய வருகிறது. எனவே, எங்கள் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது என் றார்.  இதேபோல அம்பாள் செட்டி நாடு உணவகம் உரிமையாளரி டம் கேட்டபோது, எப்பொழுதும் காலைநேரம் பெரிதும் உணவ ருந்த வருவதில்லை. மதியம் மற் றும் இரவு நேரங்களில் மட்டுமே எங்கள் வியாபாரம் நடைபெறும். தற்போது வைரஸ் பாதிப்பின் கார ணமாக பொதுமக்களிடம் பணத் தட்டுப்பாடு உருவாகி, உணவு உட்கொள்ள வருவதை தவிர்த்து வருகிறார்கள். இதனால் தினசரி ஐந்து ஊழியர்களுக்கு வேலையும், ஊதியமும் கொடுப்பதற்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் எப்படி தொழில் செய் வது என்பது கேள்விக்குறி உருவா கியுள்ளது எனத் தெரிவித்தார்.  இந்த நிலையில், கேரள மாநி லத்தில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது போல் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பது மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது. (ந.நி)