tamilnadu

img

திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர், மே 16-திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகள், தேர்தல் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மே 23 ஆம் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி.கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் வாக்குஎண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து கட்சியினருடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனைக் கூட்டமானது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கையின் போது அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் காவல்துறை துணை ஆணையர் உமா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரன், மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.