தாராபுரம், செப். 21 - தாராபுரம் அருகே வருவாய்துறை யினரின் அதிரடி நடவடிக்கையால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பதுக்கல் மணல் பறிமுதல் செய்யப் பட்டது. தாராபுரம் அடுத்து ஆலாம்பாளை யம் கிராமம், முத்துக்கவுண்டன்வலசு பகுதியில் மண்டல துணை வட்டாட்சி யர் செந்தில்பிரபு மற்றும் வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது முத்துக் கவுண்டன்வலசு பள்ளதோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் தமிழ்செல் வன் என்பவரது தோட்டத்தில் 30 யூனிட் ஆற்று மணல் பதுக்கி வைக் கப்பட்டிருந்தது. இதற்கான உரிய ஆவணங்கள் ஏதுவுமில்லை. விசார ணையில் அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணலை கடத்தி வந்து வர்த்தக ரீதியாக விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந் தது. இதையடுத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மூலனூர் காவல்நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டது. மூலனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.