திருப்பூர், ஜூலை 26- பெருமாநல்லூரில் உள்ள தனியார் வங்கி ஊழிய ருக்கு சனியன்று கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டதையடுத்து வங்கி மூடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஈரோடு சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வரு கிறது. இதில் பணியாற்றும் அன்னூர் கோவில்பா ளையம் பகுதியைச் சேர்ந்த 26 வயது ஆணுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற் பட்டுள்ளது.
இதையடுத்து இவருக்கு கொரோனா பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சனியன்று வெளியான பரிசோதனை முடிவில் அவ ருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொ டர்ந்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவர் பணியாற் றிய வங்கி மூடப்பட்டு, வங்கியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது.