திருப்பூர், செப். 23- மார்க்சிஸ்ட் கட்சியின் இடுவாய் கிளை அலுவலகத்தில் தோழர் அ.பழனிச்சாமியின் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டம் நடை பெற்றது. திருப்பூர் மாவட்டம், இடுவாய் ஊராட்சி கிளைகள் சார்பில் மறைந்த தோழர் அ.பழனிச்சாமியின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டம் இடுவாய் கிளைச் செயலாளர் கருப்பு சாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் க.காமராஜ், மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணண், விசைத்தறி சங்க மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, மாவட்டத் தலைவர் க.வேலுச்சாமி, மாநிலக்குழு உறுப்பினரும், புதுப்பா ளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், மார்க்சிஸ்ட் கட்சி யின் தெற்கு ஒன்றிய செயலாளர் சி. மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் ஜெயபால், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத் தினர். இதைத்தொடர்ந்து விசைத்தறி சங்கம் சார்பில் தீக்கதிர் ஒராண்டு சந்தா வழங்கப்பட்டது.