tamilnadu

வங்கிகளில் கடன் வசூல் - மாவட்ட ஆட்சியருக்கு சிபிஎம் கடிதம்

திருப்பூர், மே 18 - ரிசர்வ் வங்கி உத்தரவை மதிக்காமல் 3  மாத கடன் தவணையை கட்ட வலியுறுத் தும், வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில்  திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு கடி தம் அனுப்பப்பட்டது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பி டப்பட்டுள்ளதாவது. திருப்பூர் மாவட்டத் தில் தொழில்முனைவோர், தொழிலாளர் கள், சுயதொழில் செய்பவர்கள், சிறு  வணிக நிறுவனங்கள், கடைகள் நடத்தக் கூடியவர்கள் உள்ளிட்டு பல தரப்பினரும் பெற்ற வங்கித் தவணையை 3 மாதங்கள் தள்ளிக் கட்ட அவகாசம் அளிக்க அரசாங் கத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 இந்நிலையில் பெரும் பகுதி தனியார்  வங்கிகள் வங்கிக் கணக்கில் இ.எம்.ஐ எடுத்துக் கொள்வது, கட்ட சொல்லி மிரட் டுவது மற்றும் வங்கிக்கு வெளியே மண்டல அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம் என மோசமான வார்த்தைகளால் பேசுவது என்ற  நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறாக சில வங்கிகளின் மோசமான  நடவடிக்கை தொடரும் பட்சத் தில் வங்கிகளின் முன்பு போராட்டம் நடத்த  வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை யும் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே ரிசர்வ் வங்கி உத்தரவிற்கு மாறாக செயல்ப டும் வங்கி அதிகாரிகளுக்கு உரிய அறிவு றுத்தலை மாவட்ட நிர்வாகம் வழங்கி வங்கி  பயனாளர்களை பாதுகாக்க உடனடி  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.