உடுமலை, செப்.30- திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில், கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு இடங்களில் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை வேளாண்மை பல்கலைக்கழக இறுதி யாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவ, மாணவிகள் பொங்கலூரில் புதியதாக நிறு வப்பட்ட வேளாண் அறிவியல் நிலைய வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தூய்மை செய்யும் பணியில் திங்களன்று ஈடுபட்டனர். இந்த தூய்மை பணியில் வேளாண் அறிவியல் நிலை யத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆனந்தராஜ் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனர்.