அவிநாசி ஏப்.26- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் இணையதள மூலமாக பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கான பருவத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவ மாணவியர்க்கு கூகுள் மீட் செயலி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இதில் கோவை, சேலம், சிவகங்கை, பொள்ளாச்சி, சென்னை, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இணையவழியாக ஆங்கிலப் பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெடிங்க், சர்வதேச வணிக யுக்திகள், தொழில் முனைவோராதல் பயிற்சி, சுங்கவரி மேலாண்மை, பன்னாட்டு வணிகவியல் தொடர்பு, சந்தையிடல் யுக்திகள், மத்தியப் பல்கலைகழகங்களில் படிப்பதற்க்கான உயர்கல்வி வழிகாட்டுதல், மனித உரிமைகள், புள்ளியியலின் அவசியம், பன்னாட்டு சரக்கு போக்குவரத்து மேலாண்மை, குறிக்கோளை அடையும் பயிற்சி, உலகச் சந்தை மேலாண்மை, இயற்கைசார் சுற்றுலா, தற்சமயம் அதிக மகத்துவம் பெற்றுள்ள டேட்டா அனலிடிக்ஸ் போன்ற தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.
மேலும் இவ்வூரடங்கு சமயத்தில் அரசுக்கல்லூரி மாணவர்களுக்கு இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்துவது, மாணாக்கர்க்கு அவர்களின் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும், அறிவை விரிவுபடுத்திக்கொள்ளவும் வழிவகுக்கும் என பேராசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் , இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தது பேரா.பாலமுருகனுக்கு , மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.