நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை அருகில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.