tamilnadu

img

சமத்துவபுரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

திருப்பூர், நவ. 14 – திருப்பூர் மாவட்டத்தில் குழந் தைகள் தின விழா பல்வேறு இடங் களில் வியாழனன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருப்பூர் நெருப்பெரிச்சல் சமத் துவபுரம் ஊராட்சி ஒன்றியப் பள் ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக் கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து குழந் தைகள் தின விழா நடத்தப்பட் டது. இவ்விழாவிற்கு வாலிபர் சங்கக் கிளைச் செயலாளர் தன் ராஜ் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் பிரான்சிஸ் முன்னிலை யில், கணித விளையாட்டு நடத்தப் பட்டது. வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.அருள், அறிவி யல் இயக்கத்தின் சார்பில் ஆ.சிகா மணி ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். சமத்துவபுரம் வாலிபர் சங்கத் தைச் சேர்ந்த மகாலிங்கம், முத்து குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் இவ்வி ழாவில் பங்கேற்றனர். நிறைவாக பள்ளித் தலைமையாசிரியர் ஏ.குட் டியம்மாள் நன்றி தெரிவித்தார். இதேபோல், திருப்பூர் வடக்கு ஒன்றியம் விஜயபுரி கார்டன் அரசு தொடக்கப் பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார் பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. கிளைத் தலைவர் மனோகர் தலைமை ஏற்க, கிளைச் செயலாளர் விக் னேஷ் முன்னிலையில், ஒன்றியத் தலைவர் சதீஷ், ஒன்றியச் செயலா ளர் எஸ்.அருள், துணைத் தலைவர் ராஜாமணி உள்ளிட்டோர் குழந் தைகள் தினம் குறித்து உரையாற் றினர். இப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் சங்கத்தினர் பாண்டுரங் கன், இம்ரான், குமார், அஷ்ரப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்கத் தின் சார்பில் கௌரிசங்கர், ஷாருக் கான் ஆகியோர் பங்கேற்று கணித விளையாட்டு, அறிவியல் பாடல்களைப் பாடினர். குழந்தை கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.